பத்திரிகைகளை உணவாக உட்கொள்ளும் கர்ப்பிணி

பிரிட்டனைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் பத்திரிகைகளை உணவாக உட்கொள்ளும் விநோத பழக்கத்திற்கு தான் உட்பட்டுள்ளதாக கூறுகிறார்.ஆன் குரன் என்ற 35 வயது பெண், செய்தித் தாள்கள் மட்டுமே மிகவும் சுவையான உணவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.


அவர், அவசர ‘சிற்றுண்டியாக’ பயன்படுத்திக்கொள்வதற்காக செய்தித்தாள்களிலிருந்து கிழிக்கப்பட்ட துண்டுகளை தனது கைபையில் வைத்துக்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.
‘நான் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து பத்திரிகைகளில் உள்ள பக்கங்களை கிழிக்க ஆரம்பித்து விடுவேன்.

அனைவரும் வேடிக்கையாக பார்த்துக்கொண்டு இருப்பர். இப்பத்திரிகைத் துண்டுகளை நான் சொப்பிங் செய்யும் போது என்னால் அதனை உட்கொள்ள முடியும்’ என அவர் கூறியுள்ளார்.
செய்தித் தாள்கள் மாத்திரம் அதுவும் குறிப்பிட்ட சில சுவைகொண்ட கடதாசிகள் மாத்திரமே தனக்கு உண்பதற்கு விருப்பமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி : Thaaitamil.com  Post

1 கருத்துகள்:

 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters