மகனுக்குத் தந்தையின் வழிகாட்டல் தோழனுக்கும் உற்ற தோழனுக்கும் உள்ள வித்தியாசம்




ஒரு இளைஞன் எப்பொழுதும் வீட்டிற்குத் தாமதமாகவே வந்து கொண்டிருந்தான். இவ்வாறே பல நாட்கள் கழிந்தன. ஒருநாள் அந்த இளைஞனின் தந்தை, ''மகனே, ஒவ்வொரு இரவும் நீ தாமதமாகவே வீட்டிற்குள் நுழைகின்றாய். எங்கே போய் விட்டு வருகின்றாய்?''
அதற்கு, ''தந்தையே.., எனக்கு ஒரு நண்பன் உண்டு. ஒவ்வொரு இரவும் நான் அவனைச் சந்திக்கின்றேன். நாங்கள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். பொழுது செல்வது தெரிவதில்லை. எனவே தான் வீட்டிற்கு வரத் தாமதமாகி விடுகின்றது'' என்றான் அந்த மகன்.

உண்மையாகவா? இந்த வயதில் இப்படிப்பட்டதொரு நண்பனை இந்தக் காலத்திலும் பெற்றுக் கொள்ள இயலுகின்றதா..!? என்று ஆச்சரியத்துடன் கேட்டவராக, உண்மையில் இது போன்றதொரு பிணைப்பு மிக்க தோழமையை நான் என்னுடைய வாழ்நாளில் கண்டிருக்கின்றேன்.
இந்தக் காலத்தில் நட்பினால் என்ன தான் பயன் இருக்கின்றது? உண்மையிலேயே இந்த வயதில் உங்களுக்கிடையே அவ்வளவு பிணைப்பா இருக்கின்றது?



மகன் கூறினான், ''ஆம், தந்தையே..! அப்படிப்பட்ட நண்பன் தான் அவன், ''எங்கே என்னுடைய வியர்வைத்துளிகள் விழுகின்றனவோ, அங்கே தன்னுடைய இரத்தத்தைச் சிந்தத் தயாராக இருக்கின்றேன்'' என்று கூறக் கூடியவன் அவன் என்றான் பெருமிதத்தோடு தன் நட்பைப் பற்றி..!
அப்படியா நல்லது. நாளை.., நானும் உன்னுடன் அவனைச் சந்திக்க வர விருப்பப்படுகின்றேன், என்னை அழைத்துச் செல்வாயா..!
அந்தக் குறிப்பிட்டதொரு மாலை நேரத்தில் மகனுடைய நண்பனைச் சந்திப்பதற்காக கிளம்பும் பொழுது, குறிப்பிட்ட அந்த நேரத்தில் உடனே கிளம்பாமல் தந்தை சிறிது வேண்டுமென்றே தாமதப்படுத்தினார், இதன் காரணமாக அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் நேரத்தை விட அதிக நேரமாகி விட்டது. நண்பனது வீட்டைத் தாமதமாகவே வந்தடைந்தார்கள்.
முன்கதவு தாளிடப்பட்டிருந்தது. மகன் கதவைத் தட்டினான், உள்ளே இருந்த நண்பன், யாரது..? என்று குரல் கொடுத்தான்.
நான் தான்.., உன்னுடைய நண்பன்.., என்று கூறித் தன்னுடைய பெயரையும் குறிப்பிட்டான்.
ஓ..! இன்றைக்கு நீ தாமதமாக வந்து விட்டாயே..! என்று கூறியவனாக கதவைத் திறந்தான்.
உள்ளே நுழைந்த மகன் அடுத்த வார்த்தையை ஆரம்பிக்கு முன்பாகவே, அந்த நண்பன் கூறினான், காத்திருப்பதைக் காட்டிலும் தூங்கி விடலாம் என்று தூங்கி விட்டேன், இன்னும் எனக்குத் தூக்கக் கலக்கமாகவே இருக்கின்து, இப்பொழுதும் என்னுடைய உடல் நிலை சரியில்லை, என்னை மன்னித்து விடு என்று கூறினான், ''தான் வியர்வை சிந்தினால் தனக்காக இரத்தத்தையே அர்ப்பணிப்பான்'' என்று கூறியிருந்த அந்த நண்பன். அவ்வாறு கூறிக் கொண்டே அவன் கதவை மீண்டும் தாளிட்டுக் கொண்டான், கதவை தாளிடும் சங்கிலியை இழுத்துப் போடும் சப்தத்துடன் அவன் வீட்டிற்குள் திரும்பிச் சென்ற சப்தம் இருவருக்கும் கேட்டது.
அந்த தந்தை கூறினார், என்னுடைய நண்பன் அப்படி, இப்படி.. என்றாய். உன்னை எவ்வாறு அவன் நடத்தி விட்டான் பார்த்தாயா? வா..! எனக்கும் ஒரு நண்பன் இருக்கின்றான், அவன் எத்தகைய நண்பன் என்று உனக்கு நான் காட்டுகின்றேன் என்றார். அந்த நண்பர் இங்கே பக்கத்தில் தான் வசிக்கின்றார். எனக்கும் வயதாகி விட்டது, இன்னும் அவனுக்கும் கூட. அவனை நான் பார்த்துப் பல வருடங்கள் ஆகி விட்டன. வா..! அவனைச் சென்று சந்திப்போம். பின்னர் நட்பு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீயே யூகித்துக் கொள் என்றார்.
அவ்வாறு கூறிக் கொண்டே இருவரும் அந்த நண்பரது வீடு நோக்கி நகர்ந்தனர். அவனது தந்தையின் வீட்டை அடைந்ததும், அவனது தந்தை தனது நண்பரை அழைத்தார். தந்தையின் குரலைக் கேட்ட மாத்திரத்திலேயே அந்த தந்தையின் நண்பர் பதில் கொடுத்தார். இதே வந்து விடுகின்றேன் என்று கூறிக் கொண்டே, உன்னைப் பார்த்து எத்தனை வருடங்களாகி விட்டது.., இப்பொழுது தான் என்னைச் சந்திக்கத் தோன்றியதாக்கும்..! என்றார்.
மகனது நண்பனோ உள்ளிருந்து கொண்டே வந்திருப்பது யார் என்றான். ஆனால் தந்தையின் நண்பரோ தந்தையின் குரல் கேட்டதுமே, சந்தித்துப் பல வருடங்கள் ஆகிய நிலையிலும் வந்திருப்பது யார் என்று புரிந்து கொண்டார்.
சற்று தாமதத்திற்குப் பின்னர் கதவு திறக்கப்பட்டது, ஆனால் என்னதொரு வித்தியாசமானதொரு நண்பர், அவர் அவர்கள் முன் மிகவும் வித்தியாசமான கோலத்தில் காட்சி அளித்தார். அவரது தலையில் சமையல் பாத்திரங்கள் இருந்தன, அவரது ஒரு கையில் கைப்பை இருந்தது, இன்னொரு கையில் தடி ஒன்றும் இருந்தது. முகமன்.. ஸலாம் ஆகிய அறிமுகங்கள் முடிந்ததும், அந்தத் தந்தை தனது நண்பரைப் பார்த்து, இது என்ன கோலம் என்றார்?
இந்தக் கோலமா நண்பரே..! மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்களது குரலைக் கேட்டேன், வந்திருப்பது நீங்கள் தான் என்பதை ஊகித்துக் கொண்டேன்.
எனது நண்பன் வந்திருக்கின்றான்.., மிக நீண்ட நாட்கள் கழித்து.., இன்னும் இருட்டிய இந்த நேரத்தில்..! உண்மையில் அவனுக்கு ஏதாவது கஷ்டம் இருந்திருக்க வேண்டும். இன்னும் சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லாத நிலையில் பசியோடிருக்கக் கூடும். எனவே ஒரு பாத்திரத்தில் உணவை எடுத்துக் கொண்டேன். இதன் மூலம் உனக்கு நான் உணவளிக்க முடியும்.
அல்லது நீ யாரிடமாவது கடன் பெற்றிருக்க வேண்டும், அது உன்னுடைய வாழ்வை சிரமத்திற்குள்ளாக்கி இருக்கும் என்று கருதினேன். எனவே, பணத்துடன் கூடிய இந்தப் கைப்பையை எடுத்துக் கொண்டேன்.
அல்லது, உனக்கு யாராவது எதிரிகள் இருக்கக் கூடும், உன்னுடன் சேர்ந்து அவனை எதிர்ப்பதற்கு இந்தக் கம்பு பயன்படுமே என்று இதனையும் எடுத்துக் கொண்டேன்.
நண்பனே..! நானோ இப்பொழுது தள்ளாத முதுமையில் இருந்து கொண்டிருக்கின்றேன். உன்னுடைய எதிரியை வலுவோடு எதிர்க்க இயலாவிடினும், ஒன்று அல்லது இரண்டு அடிகளாவது என்னால் எதிர்த்து அடிக்க இயலும் என்றார்.
அந்த மகனுடைய தந்தை கூறினார், நண்பரே..! எந்த சண்டையும் இல்லை, நான் கடனாளியாகவும் இல்லை, பசிக் கொடுமையினால் உன்னிடம் வரவுமில்லை.
இதோ இவன் என்னுடைய மகன்..! அவன் அவனாக ஒரு நண்பனைத் தேடிக் கொண்டான். அவனுடைய நண்பனைச் சென்று நான் பார்த்து விட்டு வந்தேன். அதேநேரத்தில் என்னுடைய நண்பனையும் அவனுக்கு அறிமுகப்படுத்த விரும்பி இங்கு உன்னிடம் அழைத்து வந்தேன் என்றார்.
அந்த மகனுக்கு அமைந்த போன்ற நண்பர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்.
ஓ.. அல்லாஹ்..! ஏமாற்றுக்கார நண்பர்களிடமிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன் - வழிகெடுக்கும் நண்பர்களிடமிருந்தும் உன்னிடம் பாதுகால் தேடுகின்றேன் - அவன் தன்னுடைய இரண்டு கண்களைக் கொண்டு நிலை குத்தாமல் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, மனம் நிறைந்த அன்புடன் என்னை நோக்குவது போல இருக்கின்றது, ஆனால் மனதுள் என்னைக் கிழித்துக் கொண்டிருக்கின்றான் இன்னும் என்னை நறநறவென்று மென்று கொண்டிருக்கின்றான்..!
இத்தகைய சூது மிக்க, வஞ்க எண்ணமுள்ள நண்பனிடமிருந்து பாதுகாவல் தேடுகின்றேன்.
ஒருவரை எவ்வாறு வஞ்சக எண்ணமுள்ள நண்பன் என்று இனங் கண்டு கொள்வது?
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எப்பொழுதெல்லாம் என்னிடம் நல்லவற்றைக் காணுகின்றானோ, அதனைத் தன்னுள் மறைத்து விடுவான். எப்பொழுதெல்லாம் பிடித்தமுள்ள, நல்லனவற்றை, சரியானவற்றைக் காண்கின்றானோ, அதனையும் தன்னுள் மறைத்துக் கொள்வான். அந்த நல்லவற்றைப் பாராட்டுவதற்கு அவனது உதடுகள் வளையாது, அதனை பிறரிடம் சொல்வதற்கும் அவனுக்கு மனது வராது. இருப்பினும், எப்பொழுது என்னிடம் ஒரு தவறானதொன்றைப் பார்த்து விடுகின்றானோ, அடுத்தவர்களிடம் சென்று அதனைப் பற்றிக் கூறுவான். அதனை விளம்பரப்படுத்துவான், எனது தவறுகளைப் பிறரிடம் போட்டு உடைத்துக் கொண்டிருப்பான்.
ஓ அல்லாஹ்..! இத்தகைய நண்பர்களிடமிருந்து நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
உங்களுக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கலாம், ஆனால் அவர்களில், உண்மையான நண்பர்கள் இருப்பது மிகவும் அரிதானதே..!

நன்றி : தமிழ் இஸ்லாம்.காம்  Post      




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters