போதை தரும் அனைத்தும் இஸ்லாத்தில் தடை


“கம்ரு” எனும் அரபுச் சொல்லுக்கு புளிக்கவைத்தல் என்றும் பொருள். அப்புளிப்பே அதை அருந்துவோருக்கு போதையைக் கொடுத்து அவர்கள் அறிவை மயக்கும் தன்மைவாய்ந்தது.
அரபு நாட்டில் ஆரம்பத்தில் திராட்சை ரச மதுவே உபயோகத்திலிரு ந்து வந்தது. திராட்சை ரச மதுவிற்கு அரபு மொழியில் “கம்ரு” என்று சொல் லப்படும். அந்நாட்டு மக்கள் கோதுமை, பேரித்தம்பழம், தேன் முதலியவைகளிலி ருந்தும் மது வடித்து வந்தனர். அவை அனைத்திற்கும் “கம்ரு” என்று பெயரிட்டனர்.
அல்லாஹ் கூறுகிறான், (நபியவர்களே) மது அருந்தல், சூதாடல் ஆகியவை பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகின் றனர். அவ்விரண்டிலும் மக்களுக்கு சில நன்மைகளும், பல தீமைகளும் இருக்கி ன்றன. எனினும் அவ்விரண்டின் நன்மையை விடத் தீமைகள் பெரியது என்று கூறுக! (குர்ஆன் 2:19)

நபி (ஸல்) அவர்கள் போதை தரும் பொருட்கள் அனைத்திற்கும் தடை விதித்தனர். ஆதலால் அரபு நாட்டவர் அருந்தி வந்த திராட்சை ரசம் அல்லது ஈத்தம் கள் சாராயம் மது வகைகள் போதை தரக்கூடிய அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன.
மனித சுபாவம்
மனிதன் ஏதாவதொரு பழக்கத்திற்கு அடிமைப்பட்டுவிட்டால் அதைக் கைவிட என்றும் துணிவதில்லை. அதனைக் கைவிட அவனால் முடியவும் மாட்டாது. நாளடைவில் அப்பழக்கம் இயற்கையாக மாறிவிடும். மனிதன் மதுவிற் பிரியங் கொண்டு விடுவானாயின் அதை வெறுத்துத்தள்ள அவனால் முடிவதில்லை.
மதுவின் ஒரு நிமிட இன்பத்திற்காக அதனால் வரப்போகும் எத்தகைய பழி யையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. மக்களிடம் மதிப்பை இழப்பது, மானம் போவது, கொலைப்பாதகம் நேரிடுவது போன்ற எந்தப் பெரும் கேட்டையும் அவன் கவனிப்பதில்லை.
மதுவினால் சமுதாயத்தின் சீரழிவு
தன்மானமும் ஒழுக்கங்கெட்ட ஒரு சிலர் ஒரு சமுதாயத்தில் தோன்றினால் அச்சமுதாயம் என்னென்ன கேடுகளுக்கு இலக்காக நேரிடும். சில குடிகாரர்களின் செயல்காரணமாக அச்சமுதாயத்தின் பெண்களின் கற்பு, குடும்ப கொலை, அடிதடி, வாய்ச்சண்டை, வெறியாட்டம் இவை அனைத்தும் நடைபெறுவது கண்கூடு.
நபி (ஸல்) கூறினார்கள், சூனியக் காரன் சுவனம் செல்லவே முடியாது. சூனியக்காரனைப் போலவே மதுபானம் வடிப்பவனும், குடும்ப உறவைத் துண் டிப்பவனும் சுவனம் செல்ல முடியாது.
அறி: அபூமூஸா (ரலி)
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குடிக்கென்று ஒரு தனித்தண்டனை விதிக்கப்பட வில்லை. குடித்துவிட்டு வருபவருக்கு செருப்படி, உதை, துணியை முறுக்கி திரித்துக் கொண்டு அடிப்பது போன்ற தண்டனைகள் கொடுக்கப்பட்டு வந்தன. சிலவேளை பேரித்தநார் கயிற்றாலும் அடி கொடுக்கப்பட்டது. சிலவேளை அக்கயிற்றால் நாற்பது அடிகள் கொடுக்கப்பட்டன. சிலவேளை சூழ்நிலைக்குத் தக்கவாறு தண்டனை வழங்கப்பட்டது.

தண்டனை வழங்கப்பட்ட முறை
1. நபிகள் காலத்தில் மது அருந்திய குற்றத்திற்கு தனித்தண்டனை விதிக்கப் படவில்லை.
2. மது அருந்திய ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது “அவரை அடியுங்கள்” எனக்கூற நாங்கள் கையாலும் செருப்பாலும், துணித்திரியாலும் அவரை அடித்தோம்.
(அபூதாவுத்)
குடித்தவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரித்தமட்டை, செருப்பு ஆகியவைகளால் அடி கொடுக்கச் செய்தனர். அவ்விரண்டாலும் நாற்பது அடிகள் கொடுக்கப்பட்டன. (அறி:- கத்தாதா)

கலிபாக்கள் காலத்தண்டனை
கலிபா அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலம் முழுவதிலும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்கால ஆரம்பத்திலும் குடித்தவர்களுக்கு நாற்பது அடிகள் கொடுக்கப்பட்டு வந்தன. சிலவேளை 40 முதல் 80 ஆக உயர்த்தினார்கள். இஸ்லாமிய ஆட்சியில் இருந்த நடைமுறையே இப்போதும் இருந்து வருகிறது.
கலிபா உதுமான் (ரலி) அவர்களிடம் மது அருந்திய குற்றத்திற்காக வலீது இப்னு அக்பா என்பவர் கொண்டுவரப் பட்டார். அவர் மது அருந்தியதாக ஹம்ரான் என்பவரும் மற்றொருவரும் சாட்சி கூறினர்.
அவருக்கு தண்டனை அளிக்குமாறு அலி (ரலி) அவர்களை உதுமான் (ரலி) கேட்டுக் கொள்ள அலி (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் (ரலி)யை அழைத்து வலித்துக்கு சவுக்கடி கொடுக்கும்படி கூறவே அவர் எழுந்து அவருக்கு அடி கொடுக்க, அலி (ரலி) எண்ணுவதற்கு ஆரம்பித்தார்.
அவர் நாற்பது அடிகள் கொடுத்தவுடனே போதும்! நபி (ஸல்) அவர்களும் அபூபக்கர் (ரலி) அவர்களும் குடிகாரர் களுக்கு நாற்பது சவுக்கடிகளே கொடுத் தனர். உமர் (ரலி) அவர்கள் மட்டும் எண்பது அடிகள் கொடுத்தார்.
எனவே இக்கொடிய, தீய, பழக்கவழக்கங்களை கடைப்பிடித்திருப்ப வர்கள் ஊரையும், குடும்பத்தினரையும் பாழாக்கி நாசப்படுத்தாமல், எதிர்வரும் ரமழானில் நல்லமல் செய்து நற்பிரஜை யாக வாழ அல்லாஹ் அருள் பாலிப்பானாக.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters