விருந்தோம்பலின் பயனையும் பண்பினையும் அறிவோம்!


இஸ்லாம் விருந்தோம்பலை சிறந்த தொரு அமலாகக் கருதுகிறது. இஸ்லாமிய சகோதரத்துவம் மென்மேலும் வளர்ச்சிகாண விருந்தோம் பலும் ஒரு காரணமாக அமைகிறது.



இன்று முஸ்லிம்களின் பெருந் தொகை யானோர் விருந்தோம்பலில் அடங்கியுள்ள தத்துவங்களைப் பற்றியோ; அதன் விழு மியங்களைப் பற்றியோ சிந்திப்பதில்லை; தெரிந்தவர்கள்; தெரிந்தும் தெரியாதவர் போல வாழ்கிறார்கள்; அறியாதோர் அறியாமலேயிருக்கின்றனர்.

ஒரு சமயம் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஏழை மனிதன் தனது வறுமை நிலைமையைக் கூறி உணவு தரும்படி வேண்டி நிகின்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் தம் மனைவிமாரிடம் ஆளனு ப்பி உணவு உள்ளதா என விசாரிக்க, அன்று நீராகாரத்தை தவிர வேறு ஒன்று மில்லை எனப் பதில் கிடைத்தது.
அந் நேரம் ஒரு நபித் தோழர் நபி பெருமா னாரின் அனுமதியுடன் அந்த ஏழையை அழைத்துச் சென்றார். அன்று அத்தோழர் வீட்டில் அவர் குழந்தைகளுக்கு மட்டும் உணவிருந்து. அவர் மனைவியுடன் கதைத்து குழைந்தைகளை உறங்க வைத் துவிட்டு அந்த உணவை விருந்தாளிக்கு கொடுத்து உபசரித்தனர். அதன் பின் அத்தம்பதியினர் பசியோடு உறங்கினர். இச்சம்பவத்தை அல்லாஹ் சிலாகித்து குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்.


அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவராக யாராவது இருந்தால் அவர் தம் விருந்தாளிகளை சங்கை செய்யவும் என எம் பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
இப்படியாக பல சம்பவங்களும், பல ஹதீஸ்களும் விருந்தோம்பலைப் பற்றி சிறப்பித்து குறிப்பிட்டுள்ளதை இஸ்லாமிய வரலாறுகளில் காணலாம். அத்துடன் நபி (ஸல்) அவர்கள் உட்பட விருந்தோம்பல் ஏனைய நபிமார்களினதும் சுன்னத்தான வழிமுறையாகும்.
இப்படியான விருந் தோம்பலுக்கு பல ஒழுங்கு முறைகள் இருக்கின்றன. இந்த ஒழுங்கு முறைப்படி விருந்துக்கு அழைப்பவரும், அழைப்பை ஏற்றுக் கொள்பவர்களும் அறிந்திருக்க வேண்டிய பல வழிமுறைகள் இருக்கின்றன. இவைகள் அறிந்து செயல்பட்டால் அல்லாவின் அருள் கிடைக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.

விருந்துக்கு அறிவிப்பவர்கள் அறிய வேண்டியது.
1. பயபக்தி உள்ளவர்களையும், ஒழுக்கமானவர்களையும் விருந்துக்கு அழைக்க வேண்டும். ‘மூமின்களுடன் மாத்திரம் உறவு வையுங்கள்; உமது உணவை ஒழுக்க சீலர் அல்லாதார் உண்ணாமல் இருக்கட்டும் என்பது நபி மொழி… எனவே துன்மார்க்கர்களையும், பெரும் பாவிகளையும் அழைக்கக் கூடாது.
2. பேரையும், புகழையும் விரும்பி விருந்து வைக்கக் கூடாது.
3. செல்வந்தர்களை மாத்திரம் அழைக்கக் கூடாது.
‘விருந்துகளில் மிகத் தீயது ஏழைகளை அழையாமல் செல்வம் படைத்வர்களை மாத்திரம் அழைப்பது என்பது நபிமொழி. எனவே உறவினர், அயலவர், நண்பர்களை அழைத்து விருந்துபசாரம் செய்ய வேண்டும்.
4. விருந்தாளிகளை சிரமப்படுத்தக் கூடாது.
விருந்தாளிகள் வரும்பொழுது முக மலர்ச்சியுடன் வரவேற்று, அவர்களை அமரச் செய்யவேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் உணவு பரிமாற வேண்டும். நீண்ட நேரம் தாமதப்படுத்தி விருந்தினர் களை சிரமப்படுத்துவது நாகரிகமான செயலல்ல; என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
5. உணவு பரிமாற முன்பு பழங்கள் கொடுப்பது, உணவு உண்டபின் இனிப்பு கொடுப்பது சிறந்த முறையாகும். அத்துடன் விருந்தில் இறைச்சியும் ஒரு அங்கமாக உண்ணக் கொடுப்பது சிறப்பானது.
6. விருந்தளிப்பவரோ, விருந்தளிப்ப வர்களோ, அல்லது குடும்பத்தினர்களோ, உறவினர்களோ, விருந்தாளிகளுடன் அமர்ந்து உண்பதும், மற்றும் உணவு பரிமாறுவதும், விருந்தினர் உண்டு முடிந்த பின்பு கைதூக்குவது சிறப்பானது.
7. விருந்தாளிகளுடன் நல்ல முறையில் உறவாடுவது, வயிறார உண்ணும்படி கேட்டுக் கொள்வதும் சிறந்த பண்பாகும்.
8. விருந்தாளிக்கு குறைவான உணவோ, தேவைக்கு மிகுந்த உணவோ கொடுக்கக் கூடாது.
9. விருந்து முடிந்த பின் இன்முகத்து டன் உடன் சென்று வழியனுப்ப வேண்டும்.

விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வதும் விருந்துண்ணும் விழுமியங்களும்
1. விருந்துக்கு அழைத்தால் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
விருந்துக்கு ஒருவர் அழைத்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்; முன் சப்புக்கு அழைத்தாலும் சரி, பிந்திய சப்புக்கு அழைத்தாலும் சரி அதனை ஒப்புக்கொள்வது நபிவழியாகும். ஆனால் ஒரு விடயத்தை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சன்மார்க்கத்துக்கும், சரீரத்து க்கும் ஏற்காத, தீங்கு விளையும் எனக் கண்டால்; விருந்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது.
2. விருந்தழைப்பை ஏற்பது சகோதர முஸ்லிமை கண்ணியப்படுத்துவதாகும்; என்ற எண்ணம் இருக்க வேண்டும். எண்ணம் போலவே வாழ்வு என்பது நபி மொழியாகும்.
3. விருந்தழைப்புகளை அண்மை, சேய்மை என கவனிக்கக் கூடாது. எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
4. ஏக காலத்தில் இரு விருந்துகளுக்கு அழைக்கப்பட்டால் எது முந்திக் கிடைத் ததோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
5. விருந்துக்கழைப்பவர் யார் என எடைபோடக் கூடாது.
ஏழை, பணக்காரன் என வித்தியாசம் பார்த்து; ஏழை வீட்டு விருந்தை உதாசீனம் செய்வது பெருமைக்குரிய விடயமாகும். பெருமை இறைவனுக்குரிய இலட்சண மாகும். இதை முஸ்லிம்கள் எந்நேரமும் எதிலும் உணர வேண்டும்.
ஒரு நாள் நபி (ஸல்) அவர்களின் பேரனும் அலி (ரலி) அவர்களின் மகனு மாகிய ஹஸன் (ரலி) அவர்கள் வாகன மொன்றில் சென்று கொண்டிருக்கும் பொழுது சில ஏழைகள் தரையில் அமர்ந்து ரொட்டிகளை துண்டுகளாகப் பிய்த்து வைத்துச் சாப்பிட்டுக் கொண்டி ருந்தார்கள்.
ஹஸன் (ரலி) அவர்களைக் கண்ட அவர்கள் பெருமானார் பேரரே எங்களுடன் சாப்பிட வாருங்கள் என அன்புடன் அழைத்தனர். உடனே இமாமவர்கள் வாகனத்திலிருந்து இறங்கினார். அவர்களிடம் சென்றார்கள். அவர்களுடன் இருந்து சாப்பிட்டார்கள். இது வரலாறு.
5. சுன்னத்தான நோன்பு நோற்றி ருந்தால் விருந்தழைப்பை ஏற்று நோன்பை முறித்துவிட வேண்டும்.
‘உங்களில் ஒருவர் விருந்துக்கு அழைக்கும் நாளில் (நபில்) நோன்பாளி யாக இருந்தால் நோன்பை திறந்து உணவருந்தவும். இது பெருமானார் (ஸல்) அவர்களின் போதனை. ஒரு மூமினை சந்தோஷப் படுத்துவது இன்னோரு மூமினின் கடமை என்பதையும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
6. விருந்துபசாரத்துக்கு முன்னதாகச் சென்று பந்திகளில் உட்காரக் கூடாது. அதுபோல பந்திக்கு அதிக நேரம் தாமதித்து செல்லவும் கூடாது. இரண்டு தன்மைகளும் விருந்துக்கு அழைத்தோர்க்கு கஷ்டத்தை கொடுக்கக் கூட்டியது.
7. விருந்துக்குச் சென்றால் சபை ஒழுக்கங்களை பேணவேண்டும். விருந்த ழைப்பாளர் அமரச் சொல்லும் இடத்தில் அமர்வது சிறந்த முறையாகும். தான் விரும்பிய இடத்தில் அமர்வது. முண்டி யடித்துக்கொண்டு செல்வது பண்பான செயலல்ல.
8. எல்லோரும் சாப்பிட்டு முடிந்த பின்பு தான் எழுந்திருக்க வேண்டும். அவசர அவசரமாக எழுந்து செல்வது ஏனையவரை நோகடிக்கும் செயலாகும்.
9. விருந்து முடிந்தபின், விருந்து தந்தவர்களுக்கும், வீட்டாருக்கும் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவர்களுக்காக துஆ செய்ய வேண்டும்.
10. விருந்தில் ஏதும் குறையிருந்தால் அதை வெளியே சொல்லக்கூடாது.
இப்படியான ஒழுங்கு முறைகளை ஒவ்வொரு முஸ்லிமும் பேணினால் இஸ்லாமிய சகோதரத்துவம் பேணப்படும். ஆனால் இன்று திருமணச் சடங்கு, வலிமா, இப்படி பல பெயர்களில் முஸ்லிம்கள் விருந்தோம்பல் செய்கின்றனர். நல்லது தான். என்றாலும் ஒரு சில விருந்துபசா ரங்களைப் பார்க்கும் பொழுது வேதனை ப்பட வேணடியது மட்டுமல்ல; வெட்கப் பட வேண்டிய நிலையிலுள்ளோம்.

சில திருமணச் சடங்குகளில் மெழுகுதிரி எரிய விட்டு சங்கீத கச்சேரிகள் நடைபெறுகின்றன. இவை யாவும் நஸராக்களின் கலாசாரம் என்பதை உணர வேண்டும். அத்துடன் தேவைக்கதிகமான உணவுகள், பரிமாறப்படுகின்றன. ஏழை உறவினர், அயலவர் அழைக்கப்படுவதில்லை; நிறைய இடங்களில் மிதமிஞ்சிய உணவு வகைகள் புதைக்கப்படுகின்றன. இவை அல்லாஹுவுக்கு மாற்றமானவை.


1 கருத்துகள்:

  1. How to play baccarat - FBCasino
    Baccarat is a popular and widely accepted 온카지노 version of the game played with real money, no-limit, and no-limit bet limits. In order to play the game, งานออนไลน์ players 바카라 need to

    பதிலளிநீக்கு

 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters