YASS அமைப்பின் முதலாவது பெண்கள் பயான் நிகழ்ச்சி



YASS அமைப்பின் ஏற்பாட்டில் எமது சகோதரிகளிடத்தில் மார்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எமது பிரச்சாரப் பிரிவினால் வராந்த பயான் நிகழ்வு ஒன்று காத்தான்குடி-03, மெத்தைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள YASS அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எமது சமூக சேவைகளுக்கான இளைஞர் அமைப்பின் (YASS) தலைவர் MJM. மாஜித் அவர்களின் தலைமையில் இன்று (16.05.2012) அஸர் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமான இந்நிகழ்வில் மெத்தைப்பள்ளிவாயல் பேஷ்-இமாம் மௌலவி அல்ஹாஜ் AGM. அமீன் (பலாஹி) அவர்களால் 'இன்றைய உலகில் பெண்களின் பங்களிப்பு' எனும் தலைப்பில் சிறப்பு பயான் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் பெருந்தொகையான சகோதரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு வாராந்தம் தொடர்ந்து நடைபெற இருப்பதுடன் அல்குர்ஆன் விளக்க வகுப்புகளையும், கேள்வி பதில், போட்டி நிகழ்ச்சிகளையும் நடாத்துவதற்கு எமது அமைப்பு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.











1 கருத்துகள்:

 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters